-----------------
வினோதகன் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது மணி ஒன்பது . இவனுக்கு மட்டும் ஏதாவது ஒரு வேலையை தலையில் கட்டிவிடும் மேனஜரின் உத்தரவுக்குத் தட்ட
முடியாத நிலை.
நேரே ஸ்வீட் கடைக்குச் சென்று , திருநெல்வேலி அல்வா அரை கிலோ இரண்டு பாக்கெட்டுகளும் , மைசூர் பாகு மற்றும் காரம் இரண்டிரண்டு பாக்கெட்டுகளாகவும் கட்டச் செய்தான் .
பூக்கடைக்குச் சென்று இரண்டிரண்டு முழமாக , நான்கு முழம் மல்லிகைப் பூவும் வாங்கிக் கொண்டான் . பக்கத்துக்கு ஓட்டலில் டிபனும் முடித்துக் கொண்டான் .
எதற்கு இரண்டு பாக்கெட்டுகளாக வாங்குகிறான் என யோசிக்கிறிர்களா ? சற்று பொறுங்கள் .!
ஆறு வருடங்களுக்கு முன் மேட்டுரிலுள்ள கெமிகல்ஸ் கம்பெனியில் கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்தான் , வினோதகன் .
ஒரு வருடத்திலேயே பணி நிரந்தரம் செய்தது , அவன் கம்பெனி . இதற்கு விநோதகனின்
சுறுசுறுப்பும் , தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பதும் ஒரு காரணம் .
வீட்டிலும் கல்யாணப் பேச்சை எடுத்தார்கள் . விமலாவும் நல்ல நேரம் பார்த்து , வலது காலை
எடுத்து வைத்து , வினோதகன் வீட்டுக்குள் வந்தாள், முதல் மனைவியாக .
தேனிலவுக்கு ஏற்காடு சென்றார்கள் . உல்லாசமாகதான் பொழுதுகள் கழிந்தன .
ஆச்சு , ஒரு வருடம் , இரண்டு வருடம் என ஐந்து வருடங்கள் கழிந்தன.
ஆனால் , வீட்டில் ஒரு மழலைச் சத்தம் தான் கேட்க முடியவில்லை .
விமலாவுக்கு வீட்டில் மரியாதை குறைய ஆரம்பித்தது .
இத்தனைக்கும் அவள் மாமியார் , மாமனாருக்கோ எந்த குறையும் வைக்கவில்லை.
கணவனிடமும் அன்பாகத் தான் பழகினாள் . ஆண்டவன் சோதனையோ என்னவோ ?!
டாக்டர்களிடமும் இருவரும் சோதித்தார்கள் . இருவரிடமும் எந்த குறையும் இருப்பதாகத்
தெரியவில்லை.
ஆனால் , கிழடுகள் பொறுக்க வேண்டுமே !
மெதுவாக விநோதகனிடம் மறு கல்யாணப் பேச்சை ஆரம்பித்தனர் , பெற்றோர் .
உறவினர்களும் ஆமோதித்தனர் .
வி#183யம் மெல்ல விமலாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது . விமலா பெற்றோரிடம்
அழுது புலம்பினாள் . தமது பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என கவலைப் பட்டார்கள் .
கணவனிடம் விமலா வேண்டினாள், சிறிது காலம் பொறுங்கள் -என்று .
விநோதகனின் பெற்றோர் உறவினரிடம் எல்லாம் சொல்லி பெண் தேட ஆரம்பித்தனர்.
விநோதகனால் ஏதும் மறுக்கமுடியாத நிலை .பெற்றோரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வளர்ந்தவன் .
அன்று இரவு விமலாவை அணைத்தபடி வினோதகன் ஒரு ஐடியா கொடுத்தான் .
அதாவது விமலாவின் தங்கை சுமதியை , வினோதகன் இரண்டாவது மனைவியாக
கல்யாணம் செய்வது .
ஏனென்றால் சகோதரிகளுக்குள் எந்த விதமான பிரச்னைகளும் வர வாய்ப்பில்லை .
சுமதிக்கும் வரதட்சனை இல்லாமல் கல்யாணம் முடிந்தமாதிரி இருக்கும் .
சொந்தத்துக்குள் சொந்தம் .
இதற்கு ஒரு வழியாக விமலா சம்மதித்தாள் .
வேறு எவளாவது , சக்களத்தியாக வந்தால் , தன் கணவனின் மனதை மாற்றி விட்டால்
தன் நிலைமை அதோ கதி ஆகி விடும் என நினைத்தாள்.
தன் தங்கையே சக்களத்தியாக வந்தால் தனக்கு கட்டுப்பட்டு இருப்பாள் , என தப்புக்
கணக்கு போட்டு விட்டாள் , விமலா .
விமலாவின் பெற்றோர் சம்மதத்துடன் ஒரு நல்ல நாளில் வலது காலை எடுத்து
வைத்து விநோதகனின் வீட்டுக்குள் சுமதி வந்தாள் , இரண்டாவது மனைவியாக !.
கொஞ்ச நாட்கள் அக்கா , தங்கை பாசத்துடன் குடும்பம் நடந்தது .
புது மனைவி மோகத்தில் , வினோதகன் சுமதி இருக்கும் அறைக்குள் நுழைந்தால்
கோபத்துடன் பொருமுவாள் , விமலா .
இது சுமதிக்கு , கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை . சிறிது நாட்களில் அக்கா , தங்கைக்குள்,
மன்னிக்கவும் , சக்களத்திகளுக்குள் சண்டை சச்சரவு அதிகமாகிவிட்டது .
இன்று இரவு ஒரு முடிவோடு தான் வினோதகன் அலுவலகத்திலிருந்து இரண்டு
பாக்கெட்டுகளுடன் வந்தான் .
மணி இரவு பத்து ஆகி விட்டிருந்தது .
வீடு திறந்தே இருந்தது . மெதுவாக விமலாவின் அறைக்குள் நுழைந்தான் ,வினோதகன் .
இவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு திரும்பி படுத்திருந்தாள் ,விமலா .
பக்கத்தில் நெருங்கி அவளைத் தொட்டான் . எந்த அசைவுமில்லை.
கொண்டு வந்திருந்த ஒரு செட் பார்சலை பக்கத்திலிருந்த மேசையில் வைத்து விட்டு
சத்தம் போடாமல் வெளியே வந்து சுமதி அறைக்குள் நுழைந்தான் .
அவள் இவனை எதிர் பார்த்து இருப்பாள் போலும் ! தொட்டவுடன் எழுந்து அமர்ந்து
கொண்டாள்.
இவன் கையால் சுமதிக்கு அல்வா ஊட்டி விட்டான் . தலையில் பூச்சூடினான் .
பிறகு அவளை அனைத்துக் கொண்டான் .
அந்த சமயத்தில் தான் கதவருகில் விமலாவின் விசும்பல் சத்தம் கேட்டது .
" எனக்கு வயசாகி விட்டது . அது தான் இளசைத் தேடித் போறிங்க . நான் பார்க்காத
அல்வாவா ? ஒரு நாளைக்காவது எனக்கு ஊட்டி விட்டிருப்பிங்களா ?"
வினோதகன் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் விட்டான் .
" தெரியுதில்லே , உனக்கு வயசாகி விட்டது . பேசாமல் ஒரு மூலையில் கிடக்க
வேண்டியது தானே ! எங்களை ஏன் தொந்தரவு செய்கிறாய் ?"- சுமதி
" ஏண்டி சக்களத்தி ! நான் பார்த்து உனக்கு வாழ்வு கொடுத்தால் என்னையே
தூக்கி எறிந்து பேசுகிறாயே , உனக்கு என்ன தைரியமடி " -விமலா சுமதியை
அடிக்கப் போய் விட்டாள் .
சுமதியும் பதிலுக்கு கையை ஓங்கினாள் .
வினோதகன் இருவருக்கும் இடையில் .
சிறிது நேர சண்டைக்குப் பிறகு விமலாவும் , சுமதியும் ஓய்ந்து போனார்கள் .
விடிய விடிய , தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் , வினோதகன் .
" ஆமாம்! அவனுக்கு எப்போது குழந்தை பிறக்கும் ?"
உங்களுக்குத் தெரியுமா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக