வியாழன், 14 ஜூலை, 2011

PAALAI VANACH CHOLAI

                                 பாலைவனச்  சோலை
                                          -----------------------------------------

    பாலைவனம்   சோலை வனமானது   அரபு நாட்டில்,
    தண்ணீரால்  அல்ல ,  எரிபொருளால் ,
    சோலை வனம்  பாலைவனமானது  நம்நாட்டில் ,
     மணலால் அல்ல ,  விவசாயியின் கண்ணீரால் !
     மானியத்தில் அரசு தரவேண்டும் , விதைநெல் ,
     இடைத் தரகர் கொள்ளை , வேண்டும் நேரடி கொள்முதல்,
    தடையில்லா மின்சாரம், விளைச்சலுக்கு மதிப்பீடு !
    விளைநிலங்களை துண்டுபோடுவோர் தண்டிக்கப்படவேண்டும்.
    நாளொரு மேனி ,விவசாயி தற்கொலை !
   கவலை கொள்வோர் , கண்டுகொள்வோர் யாருமில்லை ,
    நாட்டின் முதுகெலும்பு விவசாயி ! எவன் சொன்னான் ?
   முதுகெலும்பு இல்லா நாடு நி(ற்க)லைக்க முடியுமா ?
   அரசே வேண்டாம்  இந்த விஷப்பரீட்சை !
 உடன் தேவை ,முதுகெலும்பு  அறுவை சிகிச்சை / 
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக